தமிழக சட்டப்பேரவைக்கு மே 14ம் தேதி தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே 14ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே மாதம் 22ம் தேதியோடு முடிவடைகிறது. இதே போல தமிழகம் உட்பட, கேரளா, புதுச்சேரி, அசாம்,
மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் தலைமைத் தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் வரும் மே மாதம் 14ம் தேதி சனிக்கிழமை வாக்குப்பதிவுவை நடத்தவும், 18ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தகவும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.