பிப்.15 முதல் வானொலியில் எஸ்எஸ்எல்சி தேர்வு வழிகாட்டல்
பிப்.15-ஆம் தேதிமுதல் அகில இந்திய வானொலியில் எஸ்எஸ்எல்சி தேர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இது குறித்து பெங்களூரு அகில இந்தியவானொலி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-16-ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்த தேர்வில் பாடவாரியாக எந்தெந்த கேள்விகளுக்கு எவ்வகையில் பதிலளிப்பது குறித்து கர்நாடகத்தில் உள்ள 13 அகில இந்தியவானொலி நிலையங்கள் மூலம் கல்வியாளர் குழுவினர் விளக்கம் அளிக்கவுள்ளனர்.தேர்வு நெருங்கும்போது பாடங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
இந்த நிகழ்ச்சி பிப்.15 முதல் மார்ச் 7-ஆம் தேதி பிற்பகல் 2.35 மணி முதல் 3.05 மணி அகில இந்தியவானொலியில் ஒலிபரப்பப்படுகிறது.பள்ளி நேரங்களில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் பயனை மாணவர்கள், ஆசிரியர்கள் உரியவகையில் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.