மாற்றுத்திறனாளிகள் இன்று முதல் போராட்டம்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை, ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, மாற்றுத்திறனாளிகள் இன்று துவக்குகின்றனர்.'அரசு பணியில், 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; 40 சதவீத ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும்' என்பது
உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை, மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை, எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை, இன்று முற்றுகையிட உள்ளனர். 'இந்த முற்றுகை போராட்டம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும்' என, மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.