பிளஸ் 2 தேர்வு: தமிழ் இரண்டாம் தாள் 331 பேர் எழுதவில்லை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடங்களில் பிரஞ்சு மொழித் தேர்வெழுத அனைவரும் வந்த நிலையில், தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு 331 பேர் வரவில்லை.


 கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. இந்நிலையில் திங்கள்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு 36,777 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 331 பேர் வரவில்லை. மொழிப் பாடம் இரண்டாம் தாள் தேர்வில் பிரஞ்சுக்கு விண்ணப்பித்திருந்த 1052 பேரும் தவறாமல் வந்து தேர்வெழுதியுள்ளனர். மேலும் ஹிந்தியில் 171 பேருக்கு 1, அரபியில் 76 பேருக்கு 1, சமஸ்கிருதத்தில் 403 பேருக்கு 1 என 3 பேர் மட்டுமே தேர்வெழுத வரவில்லை. மலையாளம், தெலுங்கில் தலா ஒருவர் என விண்ணப்பித்திருந்தவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். தமிழ் முதல் தாளை மதுரை மாவட்டத்தில் 280 பேருக்கும் மேலாக எழுதாத நிலையில், தமிழ் இரண்டாம் தாளையும் 331 பேர் எழுதாதது குறிப்பிடத்தக்கது. தமிழ் இரண்டாம் தாள் பாட வினாக்கள் மிக எளிமையாக இருந்ததாகவும், புத்தகத்தில் படித்த வினாக்களே கேட்கப்பட்டிருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)

RTI Letter Application - SG Asst 750 pp regarding