யாருக்கு பி.எப்., வரி விலக்கு

புதுடில்லி;பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகள் குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண்
ஜெட்லி, பார்லி.,யில் தாக்கல் செய்த, 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழிலாளர்கள், பணி ஓய்வுபெறும் போது, திரும்பப்பெறும், பி.எப்., தொகை மீது வரி விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதற்கு, தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, பி.எப்., தொகையில், 60 சதவீதத்துக்கு கிடைக்கும் வட்டி மீது மட்டுமே வரி விதிக்கப்படும் என, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அரசு மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:பி.எப்., தொகையை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணையை, மத்திய அரசு விரைவில் வெளியிடும். மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், வரிவிலக்கு பெறுவர்.இவ்வாறு அரசு அதிகாரி கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank