TNPSC:தாய்-சேய் நல அலுவலர் பணிக்கு மார்ச் 15 முதல் 18 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

தாய்-சேய் நல அலுவலர் பணியில் 82 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச்-15 முதல், 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. 



இதற்கான எழுத்துத்தேர்வில் 9,829 பேர் பங்கேற்றனர்.தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 171 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளாதோர் அடுத்தகட்ட தேர்வு நிலைகளுக்கான தகுதியினை இழக்க நேரிடும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)

RTI Letter Application - SG Asst 750 pp regarding