புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல் மாதம் சம்பளமின்றி ஏமாற்றம்.

 கல்வித்துறையில் புதிதாக பணியில் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு முதல் மாதமே சம்பளம் வழங்காததால், ஏமாற்றம் அடைந்தனர்.


               புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 393 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 186 பாலசேவிகா பதவியில் நிரந்தரம் செய்யப்பட்ட முன்மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடந்த பிப்ரவரி 3ம் தேதி, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


பணி ஆணை பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.அரசு பணிக்கு சேர்ந்தவுடன், சர்வீஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், புதிதாத நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சர்வீஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை.கடந்த பிப்ரவரி மாதம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குமார்ச் மாதம் முடியும் தருவாயிலும், இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்குவதற்கு தேவையான வங்கி கணக்கு விபரங்களையும் கல்வித் துறையில் கேட்கவில்லை.கல்வித்துறையில் சில வட்ட பொறுப்பாளர்கள்,முந்திக் கொண்டு நிதி பெற்று, தங்கள் வட்ட அளவில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டனர். மற்ற வட்டங்களில் பணியில் சேர்ந்த புதிய ஆசிரியர்களுக்கு முதல் மாத சம்பளமே கிடைக்கவில்லை. இதனால், மார்ச் மாத சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகமும் ஆசிரியர்களுக்கு எழுந்துள்ளது.


கல்வித்துறை இயக்குநர் குமார் கூறுகையில்,' புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பிப். 17ம் தேதி பணிக்கு வந்தனர். 13 நாட்களுக்கு தனியாக சம்பளம் தர முடியாது. அதனால், மார்ச் மாத சம்பளத்துடன் சேர்ந்து வழங்கப்படும். வங்கி ஆவணங்கள் சேகரிக்கப்படும்' என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022