அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள்வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்
ளன.


தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

முன்கூட்டியே மாணவர் சேர்க்கை...: 

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு முதல் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.அதற்காக கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. அதுபோல நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன.

கட்டணம் முறைப்படுத்தப்படுமா?: 

அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை - அறிவியல் கல்லூரிகளில் ரூ. 250 முதல் ரூ. 500 வரை விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆண்டுக்கு ஆண்டு புகார்கள் எழுந்து வருகின்றன.இதைத் தடுக்க கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022