வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட்

சென்னை: ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி 33 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டது.
7வது செயற்கைகோளுக்கான இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டு ஏவுவதற்கான கவுண்டவுன் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
இந்த ராக்கெட் 598 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும்.
இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022