ஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

 அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. 


         அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும்.


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் நேரடி பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தலா 50 சதவீத இடங்கள் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெலின் தெய்வகுமார், செந்தில், ஜெயச்சித்ரா உட்பட 13 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு மற்றும் பதவி உயர்வில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என 16.10.2015-ல் உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த தனி நீதிபதி, ‘பள்ளிக்கல்வித் துறை பணி விதிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது நேரடி யாக பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக இருப்ப வர்களும் சமமாக கருதப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் களுக்கு அடுத்தகட்ட பதவி உயர்வு வழங் கப்படுகிறது. ஒரே பதவியில் இரு தனித்தனி பணி மூப்பு பட்டியல் இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. எனவே பணி மூப்பு மற்றும் பதவி உயர்வில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என 29.11.2015-ல் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பெலின் தெய்வகுமார் உட்பட 13 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்து நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்கு களில் ‘பதவி உயர்வில் என்ன விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வது அரசின் உரிமை. இதில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது’ என உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கூடாது என உத்தரவிடும்போது மாணவர்கள் பாதிக்கப்படுவர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தவறில்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022