கல்வித் தகவல் மேலாண்மை முறையில் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு


கல்வித் தகவல் மேலாண்மை முறையில் இதுவரை 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 28-ஆம் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, 2015-16-ஆம் கல்வியாண்டிற்காக விவரங்களை மேம்படுத்தும் பணியை மே 10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்தப் பணியை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரியிருந்தனர். அதன்படி, மே 28-ஆம் தேதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்ய கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளதாவது:-15 நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்தப் பணியில் சர்வரின் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், சர்வரின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாத வகையிலும் கூடுதல் சர்வர்கள் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022