தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் : மருத்துவ கவுன்சில்

டெல்லி : நடப்பாண்டு தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம்
என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களில் அரசு கல்லூரிகள் தவிர, பிற கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 


அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

நுழைவுத்தேர்வு வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும், அனைத்து மாணவர்களையும் 2-ம் கட்ட மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க முடியாது. மாநில அரசு கல்லூரி தவிர அனைவரும் தேர்வை எதிர்கொள் வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதிக்க கூடாது. இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் விகாசிங் பரிந்துரை செய்துள்ளார். 

மாநிலங்களில் அரசு கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்கில் தகவல் தெரிவித்துள்ளது. 

நடப்பாண்டு தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் இந்திய மருத்துவ கவுன்சில் உச்சசநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு வழக்கு விசாரனை மீண்டும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022