பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின. 

தேர்வு எழுதிய மாணவர்களில் 91.3 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.9 சதவீதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.  

ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.6 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. 

தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 4,83,717 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்த வரையில், 4,63,618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதில் இரண்டு பேர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமசுதா 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். 
இவர் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் நோபல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்

இதேபோல், 498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 

497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.  இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

அரசு பள்ளி மாணவி ஒருவர் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.கல்விக்கு பெயர் பெற்ற நெல்லையில்தான் இந்த 'அதிசயம்' நிகழ்ந்துள்ளது. நெல்லை அரசு பள்ளியை சேர்ந்த முருகபிரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளார். 

மொழிப்பாடத்தில் 73 பேர் 100-க்கு 100 எடுத்துள்ளனர். 

கணிதத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண்ணான 100 க்கு 100 எடுத்துள்ளனர். 

ஆங்கிலத்தில் 51 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

அறிவியலில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது. 

சென்னை மாவட்ட தேர்ச்சி 94.25 சதவீதம். திருவள்ளூர் மாவட்டம் - 90.84 சதவீதம், காஞ்சிபுரம் 92.77 சதவீதம், திருவண்ணாமலை 89.03 சதவீதம், கடலூர் - 89.13 சதவீதம், விழுப்புரம் 88.07 சதவீதம், தஞ்சாவூர்-95.39 சதவீதம், திருவாரூர் - 89.33 சதவீதம், நாகப்பட்டனம் - 89.43 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும். 


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022