சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.


கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை எஸ்.பி., வெளியிட்டுள்ளஅறிக்கை: 


கோவை மத்திய சிறையில், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தேவையான கல்வி தகுதியுடன், 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். 

பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 தர ஊதியம் 2,800 ரூபாய்.இதேபோன்று ஒரு சிறுதொழில் பயிற்றுநர் பணியிடம் காலியாகஉள்ளது. இதற்குகல்வி தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி மற்றும் ஓவியப்பயிற்சி சான்றிதழ் வேண்டும். ஆறு மாதம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 தர ஊதியம் 2,800 ரூபாய்.இப்பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள், உரிய கல்வி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் ஆகியவற்றுடன், வரும் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு, மத்திய சிறை எஸ்.பி., முன் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022