ஆக.,2ல் ராணுவத்திற்கு ஆள்தேர்வு முகாம்


சென்னை மண்டல தலைமை ராணுவ ஆள் தேர்வு மையம் சார்பில், ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் ஆக.,2 முதல் 10ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் தேர்வு முகாம் ந
டக்கிறது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்ககேற்கலாம்.
இந்த முகாமில், சிப்பாய் (டெக்னிக்கல்), சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய்(பொதுப்பணி), சிப்பாய்(தொழில் நுணுக்கம் அறிந்தவர்), சிப்பாய் கிளார்க் ஸ்டோர் கீப்பர்(டெக்னிக்கல்) மற்றும் டி.எஸ்.சி., ஆகிய பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முகாமில் பங்கேற்க விரும்புவோர், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின் தாங்கள் எந்த பிரிவுக்கு தகுதியானவர் என்பதை அறிந்து விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவை முகாம் நடக்கும் இடத்தில் நடைபெறும். இந்த விபரங்கள் அழைப்பு கடிதம் குறித்த விபரம் மேற்கண்ட இணையதளத்தில் ஜூலை 17க்கு பின் தெரிவிக்கப்படும்.அழைப்பு கடிதத்தின் பிரதியை எடுத்துக்கொண்டு தேர்வு நடக்கும் சீதக்காதி மைதானத்திற்கு வர வேண்டும், என திருச்சி இந்திய ராணுவ ஆள்தேர்வு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022