அறிமுகம் - `அம்மா வை-பை?`.


            தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் அமல்படு
த்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.
            முதலாவதாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் உள்ள பேருந்து நிலையம், பொழுதுபோக்கு பூங்கா போன்ற இடங்களில் இலவச அம்மா 'வை-பை' வசதி ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த வசதியை முதல்வர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதுபற்றி அரசு அதிகாரி: தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 32 மாவட்டங்களின் தலைநகரங்களில் இலவச 'வைபை' வசதியை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பேருந்து நிலையம், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும். அதே சமயம் ஒருவர் இந்த வைபை வசதியை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே டவுன்லோடு செய்ய ஏதுவாக சில கட்டுபாடுகளும் விதிக்கப்படும்.
இதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. டெண்டர் ஆகஸ்டு 15க்கு முன் இறுதி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்ப்பதாகவும், செப்டம்பர் மாதம் இலவச வைபை உபயோகத்துக்கு வரும் என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் உபயோகத்தை பொறுத்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரைவில் செயல்படுத்த நடடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த திட்டத்துக்கு வழக்கம்போல் "அம்மா வை-பை" என்று பெயர் சூட்டப்படுமா? அல்லது தமிழ்அநாடு அரசு பெயரிலே செயல்படுத்தப்படுமா என்பது உபயோகத்துக்கு வரும்போதுதான் தெரிய வரும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022