கரன்சி அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி


இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் சூபர்வைசர் பணிக்காக காலியிடங்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


மொத்த காலியிடங்கள்: 16
பணி: Supervisor (Research & Development):
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 25,400.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மெட்டலர்ஜி, பல்ப் மற்றும் பேப்பர் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மையம்: மத்திய பிரதேசம் - போபால்,  மகாராஷ்டிரா - நாசிக், தெலங்கானா - ரெங்காரெட்டி, கொல்கத்தா - கிரேட்டர்  கொல்கத்தா, மும்பை - நவி மும்பை, கிரேட்டர் மும்பை, தானே, புதுதில்லி - என்சிஆர்.
விண்ணப்பிக்கும் முறை: http://cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016
ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.07.2016.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022