உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 15 பேருக்கு ஆணை


திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் பெற்ற 14 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ப
ணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
 தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கான கலந்தாய்வு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இணைய வழி மூலம் நடைபெற்றது. இதில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 11 பேர், 3 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றும் 7 பேர் என மொத்தம் 18 உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களில் குஜிலியம்பாறை, கொடைக்கானல், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட 5 இடங்கள் காலியாக இருந்தன. கலந்தாய்வு தொடங்கியதும், மாவட்டத்திற்குள் 11 பேர், மாவட்டம் விட்டு மாவட்டம் 4 பேர் என மொத்தம் 15 பேர் பணி மாறுதலுக்கான இடங்களை தேர்வு செய்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணி மாறுதலுக்கான ஆணையை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா வங்கினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022