ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


கோவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

கோவையில், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கலந்தாய்வு நடைபெறும். இதில், 6-ஆம் தேதி நடைபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள் இடம் மாறுவதற்கான கலந்தாய்வு, 7-ஆம் தேதி நடைபெறும் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக் கலந்தாய்வு, 13-ஆம் தேதி நடைபெறும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள் இடம் மாறுவதற்கான கலந்தாய்வு ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்.
இதையடுத்து, 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறும் அனைத்துக் கலந்தாய்வுகளும் துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022