பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம்


       பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன.


           தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 அரசு ஒதுக்கீட்டு பி.எட். இடங்களில் 2016-17ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3-வது வாரத்தில் நடைபெறவுள்ளது.


இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 முதல் 9-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரிலும், தபாலிலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். அதன் பிறகு வந்துசேரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ. பட்டதாரிகளுக்கு 20 சதவீதம்: தமிழக அரசின் அரசாணைப்படி, 2015-16 கல்வியாண்டு முதல் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். நிகழாண்டில் இவர்களுக்கு இயற்பியல் அறிவியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய 4 பிரிவுகளில் மட்டும் 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் அறியலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022