தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.
      மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மா
வட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.

குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022