பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது தவறல்ல: உயர்நீதிமன்றம்!


           டெல்லி உயர்நீதிமன்றம், சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள் தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்திருக்கிறது. 


        நகல் எடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்வதற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, இந்திய காப்புரிமை சட்டத்தின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


          போட்டோகாப்பியர் கியோஸ்க், சர்வதேச பதிப்பாளர்கள் வெளியிட்ட பாடப்புத்தகத்தினை நகலெடுத்து மாணவர்களுக்கு விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட தடையினை, நீதிபதி ராஜீவ் சஹாய் நீக்க உத்தரவிட்டார். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அருகே உள்ள ராமேஸ்வரி போட்டோகாப்பி சர்வீஸஸுக்கு, இதே போன்ற காரணத்துக்காக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாடப்புத்தகங்களை நகல் எடுத்துக் கொடுப்பது தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக யுனிவர்சிட்டி பிரஸ், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் மற்றும் டெய்லர் அண்ட் பிரான்சிஸ் சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், டெல்லி பல்கலைக்கழகம், மாணவர்கள் பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது கல்வித்தேவைக்காக தான், இதனை அத்துமீறலான விஷயமாக கருதக்கூடாது என்று தெரிவித்திருக்கின்றனர். புத்தகங்களின் விலை அதிகமாக இருப்பதால் மாணவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். காப்புரிமைச் சட்டம் 1957-ஐ முன்வைத்து, பல்கலைக்கழகத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
மாணவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு நகல்களை பயன்படுத்துகிறார்கள், விற்பனை நோக்கத்திற்காக யாரும் நகல் எடுப்பதில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் போட்டோகாப்பியர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அறிவுசார் சொத்து நிபுணர்கள் இந்தத் தீர்ப்பினை பாராட்டியிருக்கிறார்கள். நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில், “நகல் எடுப்பது தெய்வீகமான விஷயமல்ல. ஆனால், கற்றல் என்பது முக்கியமான சமூக தேவையாகும். இது முக்கியமான தருணம் என்பதை மனதில் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022