தொலைநிலைக் கல்வி மைய தேர்வு ரத்து உயர்நீதிமன்றத்தில் பல்கலை தகவல்


      மதுரை, மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 400 மாணவர்கள் சே
ர்க்கை, தேர்வை ரத்து செய்ய பல்கலை நிர்வாகம் பரிந்துரைத்தது.

         உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தர்மபுரி குளோபல் அகாடமி பார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தாக்கல் செய்த மனு எங்கள் கல்வி மையம், மதுரை காமராஜ் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலை நிலைக் கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ல், பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம். 2015----16 கல்வி ஆண்டில் எங்கள் மையம் மூலம், 400 மாணவர்கள் தொலை நிலைக் கல்வியின் கீழ் படித்தனர். வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஒரு பள்ளியில், 2015 மே 17 ல் தேர்வு நடந்தது. ஓராண்டிற்கு மேலாகியும், விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை; தேர்வு முடிவு வெளியாகவில்லை. விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.
நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.பல்கலை தேர்வு, ஒழுங்கு மற்றும் மாணவர்கள் நலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, பல்கலை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அதன் விபரம்: தேர்வு 2015 மே 16 முதல் ஜூன் 5 வரை நடந்தது. தர்மபுரி மையத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வு எழுதியதாக கூறுவதில், முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வருகிறோம். ஆகையால், 400 மாணவர்களின் தேர்வு மற்றும் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அவர்களை மீண்டும் பல்கலையில் எந்த படிப்பிலும் சேர அனுமதிக்கக் கூடாது. தர்மபுரி மையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டது.பல்கலை வழக்கறிஞர், ''குழுவின் பரிந்துரை, நடவடிக்கைக்காக உயர்கல்வித்துறை செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,'' என்றார்.
நீதிபதி செப்.,29 க்கு ஒத்திவைத்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022