வெளிநாட்டில் படிக்கும் மாணவரா நீங்கள்? அப்ப முதல்ல இதை செய்யுங்க..!


         வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு அவசர கால உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது? யாரைத் தொடர்புகொள்வது? என பல குழப்பங்கள் இருக்கு
ம். இந்த குழப்பங்களுக்க தீர்வாக புதிய வசதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்கம் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து வருட வருடம் மாணவ- மாணவிகள் பலர் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி பயிலச் செல்கின்றனர். ஆனால், இப்போது வரை இந்திய மாணவர்கள் எத்தனை பேர் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர் என்கிற தரவு கூட மத்திய அரசிடம் இல்லை. இதனால் இந்திய மாணவர்கள் ஏதேனும் வழக்கில் அல்லது பிரச்சனைகளில் சிக்கினால் அவர்களுக்கு உடனடி உதவிக்கு வழி இல்லாமல் இருந்தது. (www.seithiula.blogspot.in)

இந்நிலையில், 'தூதரக குறைதீர்ப்பு கண்காணிப்பு அமைப்பு(MADAD)' இணையதளத்தில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தங்களை பற்றிய தகவல்களையும், குறைகளையும் பதிவு செய்யும் வசதியினை மத்திய வெளியுறவுத்துறை உருவாக்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி தேவைப்படும் போது இந்திய அரசு மிக எளிதில் உதவ முடியும். இதுவரை 1085 மாணவ- மாணவிகள் தங்களை பற்றிய முழு தகவல்களையுல் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

MADAD இணையதளம் இந்திய அரசால் 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு நீதிமன்ற வழக்கு, இழப்பீடு, உள்நாட்டு உதவி, சம்பள பாக்கி, தாயகம் திரும்ப உதவி போன்ற இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க இந்த இணையதளம் உதவியுள்ளது. கிட்டத்தட்ட 13.206 குறைகள் இந்த இணையளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், இதுவரை 8233 குறைகளுக்கு மத்திய அரசு தீர்த்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022