வேளாண் கடன் - வட்டி செலுத்த அவகாசம் நீட்டிப்பு


வேளாண் கடன்களுக்கான வட்டியை செலுத்தும் கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் நீட்டித்துள்ளதோடு,
குறுகிய காலத்துக்குள் தொகையை சரியாகச் செலுத்து
வோருக்கு, வட்டித் தொகையில் 3 சதவிகிதம்
தள்ளுபடிச் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி மதிப்புக்கு வேளாண் கடன் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதன்படி, செப்டம்பர் மாதம் வரையில் ரூ.7.56 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்தப் பணத்தில் 86 சதவிகித நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியும், வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றை திரும்பச் செலுத்தமுடியாத நிலையிலும் தவித்து வருகின்றனர். எனவே, பழைய ரூ.500 நோட்டுகளைக் கொண்டு அரசின் விதைப் பண்ணைகளில் இருந்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. அதேபோல, அவர்களின் கடனைப் பொருத்து உரங்களை வழங்கும்படியும் உர நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வட்டியைச் செலுத்த அவர்களுக்கு கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் வரை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சக கூடுதல் செயலர் ஆஷிஷ் குமார் பூடானி கூறுகையில், ‘விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.3 லட்சம் ஓராண்டு குறுகியகால கடனுக்கு 7 சதவிகித வட்டி விதிக்கப்படுகிறது. கடனை சரியாகச் செலுத்துவோருக்கு 4 சதவிகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரைக்குள் வேளாண் கடனுக்கான வட்டியைச் செலுத்த விவசாயிகளுக்கு 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022