மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!


ரொக்கம் இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்தி
ய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது. .

இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்கு ரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதி தொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

10 பேரை இணைக்க வேண்டும்
பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள் ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான் இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல் தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட 10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில் இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022