இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு


         அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


          அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர்.

           அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.

                ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022