ரூ.660.50 கோடி பயிர்க்கடனுக்கான வட்டி தள்ளுபடி !!!


        விவசாயிகள் தங்களது பயிர்க்கடனை செலுத்த, மேலும் 2 மாத கால அவகாசம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வட்டித் தொகை: 


மேலும், குறுகிய கால பயிர்களுக்கான வாங்கப்பட்ட கடன்களுக்கான, கடந்த நவம்பர் டிசம்பர் மாதத்திற்கான வட்டித்தொகை ரூ.660.50 கோடியை தள்ளுபடி செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக, நவம்பர் - டிசம்பர் மாதத்திற்கான தவணை தொகையை செலுத்த கால அவகாசம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், பாட்னா விமான நிலைய விரிவாக்கத்திற்கு பீஹார் அரசுடன் இணைந்து நிலம் கையகபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2017 ஐஐஎம் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கிராம பகுதிகளில் வீடு கட்டுவதை ஊக்குவிக்க ரூ. 2 லட்சம் வரை வட்டி மானியம் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை மேம்படுத்தவும் வட்டி மானியம் வழங்கப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022