பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்
            சென்னை, தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.


இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு பெற்றாலே, தாமதமான, பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யலாம் என, உள்ளாட்சிகள் மற்றும், பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுக்கு, சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.