நீட் தேர்வு: தமிழக மாணவர்களைக் காக்க புதிய சட்டம் !!


தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின்

இடங்களை பறிக்க நீட் தகுதித் தேர்வு வழிசெய்யும் என, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகிறார்கள்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தகுதித் தேர்விலிருந்து தமிழக மாணவர்களைக் காக்க 2 சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் மருத்துவ பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக நீட் தேசிய தகுதித்தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக நீட் தேர்வை எழுத வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது.
இதனால் தமிழக மாணவர்களைக் காக்கும்வகையில் இரு சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிகிறது. எனவே நீட் தகுதித் தேர்வின்றி, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. நீட் தகுதித் தேர்வை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதால், இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றபிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. நீட் தகுதித் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத்தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி எய்ம்ஸ், சண்டிகர் பிக்மர், புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகள் தனிச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவை. இதனால், அவற்றுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022