ஓய்வூதியர் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


      ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.


    இது குறித்து, மண்டல வைப்பு நிதி கமிஷனர், பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஓய்வூதியம் பெறுவோர், உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க, ஜன., 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, 'jeevan pramaan portal' என்ற இணையதளம் வழியாக, சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.

இச்சேவையை, பொதுச் சேவை மையம், அரசின், இ - சேவை மையங்கள் மூலமாகவும் பெறலாம்; பி.எப்., அலுவலகத்தையும் அணுகலாம். சான்றிதழ்கள் சமர்ப்பிக்க செல்வோர், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய வழங்கு ஆணை, மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022