TNPSC:கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு.


கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி
7-ம் தேதி நடைபெறும்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரூப்-3 தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில் 24 காலிப் பணியிடங்களை நிர்ப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 30 பேர் தற்காலிகமாகத் தேர்வுசெய்யப் பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண் கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022