நாடு முழுவதும் 15 லட்சம் ஊழியர்கள்..வேலையிழப்பு? ஐ.டி., தகவல் தொடர்பு, வங்கி துறை முடங்கும்.


இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொ
ழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், 1991க்கு பின் பொருளாதார சீர்த்திருங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் வங்கித்துறைகளில், பெருமளவு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும், உயர் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறை கள் வளர்ச்சி கண்டன; இதனால் படித்து பட்டம் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள், தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
உற்பத்தித்துறை
எனினும், உலகளாவிய பொருளாதார சூழ லால், இந்தியாவில் சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது.
குறிப்பாக உற்பத்தித் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள், கடந்த இரண்டு ஆண்டுகளில்
குறைந்துள்ளன; இதனால், ஆயிரக்கணக் கானோர் வேலையிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.டி., தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த சேவை பணிகளில் பெருமளவு வேலைவாய்ப்புகள் குறையும் என தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் பாதிப்புமத்திய புள்ளி விபரங்கள் அமைப்பின் தகவலை சுட்டிக் காட்டி, வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை கூறியுள்ளதாவது:
மக்களிடையே செலவு செய்யும் வாய்ப்பு குறைந்து வருவதால், சேவை துறைகளில் அதன் பாதிப்பு எதிரொலிக்கிறது; இதனால், சேவை சார்ந்த, ஐ.டி., வங்கி சேவை உள்ளிட்டவை, மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன.இதனால், ஏராள மானோர் வேலையிழக்கும் சூழல் தற்போது உரு வாகி வருகிறது. வருங்காலத்தில், இத்துறை சார்ந்த, 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022