TNTET & TNPSC தேர்வுகள் ஒரே நாளில் வருவதால் தேர்வர்கள் குழப்பம் !


பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி நடத்தப்படும் என கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை
யன் நேற்று அறிவித்தார்.

அதே நாளில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் குரூப் 7-பி பணிக் கான தேர்வும் நடைபெற உள்ள தால் 2 தேர்வுகளையும் எழுதுவ தற்காக தங்களை தயார்படுத்தி வருவோர் குழப்பத்தில் உள்ளனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதைப் பின்பற்றி மாநில அரசு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.இந்தத் தேர்வை எழுத பட்டப் படிப்பு படித்தவர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
 இந் நிலையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார்.அதே நாளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்குரூப் 7-பி எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர்ஸ் பணிக்கான தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 25.11.2016-ல் வெளியிடப்பட்டது.ஒரேநாளில் 2 தேர்வு நடை பெற இருப்பதால் இரண்டு தேர்வு களிலும் பங்கேற்கத் திட்டமிட்டு தங்களைத் தயார்படுத்திவரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குழப் பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரி யர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வரும் ஒருவர் கூறியபோது, “என்னைப் போன்று பட்டதாரி கள் குரூப் 7-பி பணிக்கு விண்ணப் பித்துள்ளோம். இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ல் நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர் பணி கிடைக்கும்என ஏராளமானோர் காத்திருந்த நிலையில், 2 தேர்வும் ஒரே நாளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளதால் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை கோடை விடுமுறை யான மே மாதத்தில் நடத்தி னால் தேர்வில் பங்கேற்க உள் ளோருக்கு கால அவகாசமும், 2 தேர்வுகளையும் எழுதும் வாய்ப்பும் கிடைக்கும். எனவே, இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)

RTI Letter Application - SG Asst 750 pp regarding