சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 1 நாள் மட்டுமே!

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 1 நாள் மட்டுமே!


பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்திநிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலைகிடுகிடுவென குறைந்துள்ளது.





நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசுகட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும்மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்துவெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையைகட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ்(பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.



இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகனஇன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல்நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.


வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்குவருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால்உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவேஉற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ,ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதினமோட்டார் வாகன நிறுவனங்கள்.


வழக்கு
ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்துகொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன்கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல்இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்யஅனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்திநிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


அதிரடி உத்தரவு

இந்த மனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம்கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல்இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதியதொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில்இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டதுஎன கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால்இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதிமுதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனைசெய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்றுபிறப்பித்தது.
வாகன நிறுவனங்களுக்கு நஷ்டம் இதையடுத்து பெரும்நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்லதொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளவாகனங்களை இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும்குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம்அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர்விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.


தள்ளுபடி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட்வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்குரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட்பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாகஅறிவித்துள்ளது.



இரு நாட்கள்தான் கெடு ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர்மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட்அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 இரவுக்குள் முடிந்தஅளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டியகட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022