மார்ச் 21,22,23ல் புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மார்ச்.21,22,23 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் தொடர் சாலைமறியல்
போராட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.



தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கு.சத்தி, மாவட்டச் செயலாhள் பெ.அன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி உள்ளிட்டோர் பேசினர்.


சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப்பாதுகாப்புடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தப் பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறோம்.


இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வருகின்ற மார்ச்.21,22,23 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் தெடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022