6,7ம் வகுப்பிற்கான கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு !!


டெல்லி கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


6,7ம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுவாய்ப்பு அளிப்பது குறித்து பரிந்துரை செய்யப்படும் என்றும் மறுவாய்ப்பு தேர்வில் தேர்ச்சி 
பெறுபவரே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் வகுப்புக்கான தேர்வு முறையை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் வேண்டும் என 23 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.