பகுதி நேர ஆசிரியர்கள்போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர்


பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில், ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. 


         ஐந்து ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், வாழ்க்கை கல்வி, கட்டடக்கலை மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட, எட்டு பிரிவுகளில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு, தொகுப்பூதியமாக மாதம், 7,000 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. பல ஆண்டுகளாக இதே சம்பளம் பெறுவதால், வீட்டு வாடகை, குடும்ப செலவுக்கு தடுமாறுகின்றனர்; கடன் சுமையில் தவிக்கின்றனர்.


 இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழுவினர், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில், 5,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வந்து ஆதரவு தெரிவித்தனர். 

அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன், திடீரென மறைத்து வைத்திருந்த, அரளி விஷ விதையை தின்று, தற்கொலைக்கு முயன்றார். அதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, 108 ஆம்புலன்சில், அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து வெளியேறினார்.

போராட்ட குழு நிர்வாகிகள், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரனை சந்தித்து பேசினர். அவர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக, நிர்வாகிகளிடம் உறுதி கூறினார். நேற்று மாலை, 6:00 மணிக்கு போராட்டம் முடிவதாக இருந்தது. ஆனால், கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதி அளிக்கவில்லை என, போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர் அறிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022