பங்களிப்பு ஓய்வூதிய(CPS) தொகைக்கு 8 சதவீதம் வட்டி


தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், 2003 ஏப்., 1ல் இருந்து, அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில்,10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.அதற்கு இணையானத் தொகையை, தமிழக அரசு வழங்குகிறது. இந்தத் தொகை ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்தொகைக்கு, 2017 ஜன., 1 முதல் மார்ச், 31 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022