ஏன் வாகனங்களின் விலையில் அதிரடி தள்ளுபடி செய்யப்பட்டன ??

நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.


இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு


குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.


ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


இந்த மனுவுக்கு சுற்றுசூழல் மாசுகட்டுப்பாட்டு ஆணையம் கடும்
எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால்,2005 மற்றும் 2010ல் இதேபோல
முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3என்ற புதிய தொழில்நுட்பங்கள்
அறிமுகப்படுத்தப்பட்ட போதுஸ்டாக்கில் இருந்த பழைய
வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார்
உற்பத்தியாளர்கள் தரப்பில்வாதிடப்பட்டது. ஆனால் இந்த
வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல்
பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ
கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது. இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல
தொடங்கியுள்ளன. 20 ஆயிரம்கோ டி ரூபாய் மதிப்புள்ள
வாகனங்களை இன்னும் 2 நாட்களில்விற்பனை செய்ய வேண்டிய
கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு.அதிலும் குறிப்பாக ஹீரோ
நிறுவனம் மற்றும் ஹோண்டாநிறுவனம் அதிக பாதிப்பை
சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள்டூவீலர் விலைகளை அதிரடியாககுறைத்துள்ளன.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்,பி.எஸ்.3 வகையில் தயாரான
ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500டிஸ்கவுண்ட் வழங்குவதாக
அறிவித்துள்ளது. பிரீமியம் வகைபைக்குகளுக்கு ரூ.7500
டிஸ்கவுண்டும், நுழைவுநிலையிலுள்ள மாஸ் மார்க்கெட்
பைக்குகளுக்கு ரூ.5000 வரையும்டிஸ்கவுண்ட் தருவதாக
அறிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் தனதுஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு
ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட்அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச்
31 இரவுக்குள் முடிந்த அளவுக்குபைக்குகளை விற்பனை செய்து தீர
வேண்டிய கட்டாயத்தில் அந்தநிறுவனங்கள் உள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022