57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு!!


தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.


இது தொடர்பாக, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 728 பேர், அரசு வேலைவாய்ப்பு கேட்டு, பதிவு செய்துள்ளனர். 18 - 23 வயது வரையிலான பிரிவில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 681 பேர் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், 24 - 35 வயதுக்கு உட்பட்ட, 31 லட்சத்து, 6 ஆயிரத்து, 154 பேர்; 35 - 56 வயதுக்கு உட்பட்ட, 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 837 பேர், அரசு வேலை வாய்ப்பகங்களில், பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில், அரசு வேலைக்காக காத்திருக்கும், 84 லட்சத்து, 64 ஆயிரத்து, 136 பேரில், 5,736 பேர், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022