இன்ஜி., ஒதுக்கீடு : அவகாசம் இன்று நிறைவு!!


இன்ஜி., கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான கெடு, இன்று(ஆக.,31) முடிகிறது. நாளை, அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகளை துவங்க, அண்ணா
பல்கலை உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங், ஆக., 19ல் முடிந்தது. நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக இருந்த, 1.30 லட்சம் இடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை அனுமதி அளித்தது. இதன்படி, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, இன்றுடன் காலக்கெடு முடிகிறது.

தொடர்ந்து, நாளை முதல், புதிய மாணவர்களுக்கு வகுப்புகளை துவங்க, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. புதிய மாணவர்களை, கல்லுாரி வளாகம், விடுதி மற்றும் கல்லுாரி வாகனங்களில், சீனியர் மாணவர்கள், ராகிங் செய்யாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022