குரூப் - 4' பதவியில் 4,682 பேர்!!!


அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 4'ல் அடங்கிய, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ ஆகிய பதவிகளுக்கு, 2016, நவ., 6ல் தேர்வு நடந்தது.

இதன் முடிவு, 2017, பிப்ரவரியில் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலை, 17 முதல், செப்., 6 வரை கவுன்சிலிங் நடந்தது. இதில், 2,708 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.
தட்டச்சர் பதவிக்கான கவுன்சிலிங்கில், 1,582 பேருக்கும், 'ஸ்டெனோ நிலை - ௩' பதவிக்கான கவுன்சிலிங்கில், 392 பேர் என, மொத்தம், 4,682 பேருக்கு, ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கு, அந்தந்த அரசுத்துறைஅலுவலகங்கள் மூலம், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு, விரைவில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022