தமிழகத்தில் 4 வகுப்புகளுக்கு நவம்பர் 15-ந்தேதி முதல் புதிய பாடத்திட்டங்கள்

தமிழகத்தில் 4 வகுப்புகளுக்கு நவம்பர் 15-ந்தேதி முதல் புதிய பாடத்திட்டங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்



தமிழகத்தில் வருகிற நவம்பர் 15-ந் தேதி முதல் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்
என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி:

கோபி மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.11 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

புதிய கட்டிடத்தை திறந்து வைத்து கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன் பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறைக்காக ரூ.263 கோடி ஒதுக்கினார். அதன் அடிப்படையில் கல்வித்துறையானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக கல்வித்துறையில் சிறப்பிடம் பெற்று திகழ்கிறது.

உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருகிற நவம்பர் 15-ந் தேதி முதல் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.



மாற்றம் என்பது மாணவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்தும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது.

வருகிற 3 ஆண்டுகளுக்கு பிறகு வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் தரக்கூடிய கல்வித்துறையாக தமிழக கல்வித்துறை திகழும். பிளஸ்-2 படித்தவுடன் வேலை வாய்ப்புகள் கிடைக்க பல மாற்றங்களை கொண்டு வர உள்ளோம்.

மாணவர்களுக்கு படிப்படியான திட்டங்களை செயல்படுத்துகின்ற இந்த வேலையில் வரும் டிசம்பர் மாதத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டுகள் மூலம் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோபி நகராட்சி பகுதியில் ரூ.17 லட்சம் செலவில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வினியோகத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022