இக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு

இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப்பல்கலைக்கழகம் சார்பில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பி.எட்., எம்.பி.ஏ. ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்னோ மதுரை மண்டல இயக்குநர் எஸ்.மோகனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திராகாந்தி தேசிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் ஜனவரி 2019 ஆண்டு பி.எட்., எம்.பி.ஏ. சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் நவம்பர் 15 ஆகும். நுழைவுத் தேர்வானது வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்வுகள் குறித்து மேலும் விவரங்கள் அறிய இக்னோவின் இணையதளமான w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n என்பதில் பார்த்துக்கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022